ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையை மீறி பதவியேற்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
Sri Lanka
Sri Lanka Cabinet
Government Of Sri Lanka
Samagi Jana Balawegaya
By Kalaimathy
சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஹரின் பெர்ணாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த அறிவிப்பை ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கத்துடன் இணைவது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சு பதவிகளை ஏற்பதில்லை என கட்சி முடிவெடுத்திருந்த நிலையில், கட்சிமுடிவை மீறி செயற்பட்டதாலேயே, இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 3 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்