சர்வதேசத்தின் இறுக்கத்திற்குள் ரணில் - மக்களின் குரல் வளையை நசுக்க முற்படக் கூடாது; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Human Rights Commission Of Sri Lanka Human Rights Council Ranil Wickremesinghe Sri Lanka SL Protest
By Kalaimathy Sep 29, 2022 07:25 AM GMT
Report

இலங்கை மக்கள் தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தி கொடுக்காது கைது செய்து அவர்களின் குரல் வளையை நசுக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்க கூடாதென சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள அதி உயர் பாதுகாப்பு வலயம் குறித்த அறிவிப்பையும் உடனடியாக மீள எடுக்க வேண்டுமென அந்த கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இலங்கையில் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு அமைய மக்களின் அமைதியான ஒன்றுகூடல் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமைகளை மதிக்கவும் பாதுகாப்பதற்குமான பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை

சர்வதேசத்தின் இறுக்கத்திற்குள் ரணில் - மக்களின் குரல் வளையை நசுக்க முற்படக் கூடாது; விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | Sri Lanka High Security Zone Colombo Human Rights

இதனை சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கையின் அதி உயர் பாதுகாப்பு வலய பிரகடனமானது மனித உரிமைகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படாது என சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும் அவை அனைத்தும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளாகவே உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் வாக்குறுதிகளை மீறும் தொடர் செயற்பாடுகள் மற்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் தீவிரமான அடக்குமுறைகளை தடுப்பதற்கு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் வலுவான தீர்மானம் முக்கியமானது எனவும் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

நீதி கோரிய போராட்டத்தில் கண்ணீர்ப்புகை பிரயோகம்

சர்வதேசத்தின் இறுக்கத்திற்குள் ரணில் - மக்களின் குரல் வளையை நசுக்க முற்படக் கூடாது; விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | Sri Lanka High Security Zone Colombo Human Rights

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க உயர் பாதுகாப்பு வலயத்தை பிரகடனப்படுத்திய அடுத்த நாள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர் ஆர்வலர்களை விடுவிக்குமாறு கோரி சோசலிச இளைஞர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த் தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படாவிடிலும் சட்டவிரோதமாக இளைஞர் சங்கத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது எனக்கூறி 84 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு மேல் நீதிமன்றம் மட்டுமே பிணை வழங்க முடியும் எனவும் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை நிறைவேற்றுவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் எனவும் மீனாட்சி கங்குலி மேலும் வலியுறுத்தியுள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், கன்னாதிட்டி, கிளிநொச்சி, பிரான்ஸ், France

22 Feb, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, வெள்ளவத்தை

20 Feb, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Milton, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026