இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புகின்ற விடயம் அரசியல் வங்குரோத்து தனம்!

india sri lanka prime minister amparai press meet podujana peramuna
By Kalaimathy Jan 11, 2022 09:46 AM GMT
Report

மக்களை மூளைச்சலவை செய்யும் நோக்குடனும் தமது அரசியல் வங்குரோத்து தனத்தினை மீளவும் சரி செய்வதற்காகவுமே இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புகின்ற விடயம் அமைந்துள்ளது. உள்நாட்டு பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்து சென்று தீர்வினை பெற முயல்வதும் இவர்கள் இலங்கையை சவாலுக்கு உட்படுத்தி வருகின்றனர் என்பதே ஆகும் என பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அஹமட் புர்கான் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

13 ஆம் அரசியல் திருத்த சட்டத்திற்கு முஸ்லிம் கட்சிகள் ஆரம்பகாலத்தில் எதிரான போக்கு உள்ளவர்களாகவே பார்த்திருக்கின்றோம். இரவோடு இரவாக 13 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டதன் பின்னணியில் தான் முஸ்லிம்களுக்கான அரசியல் தேவைப்பாடு ஒன்றின் அவசியம் உணரப்பட்டது.

தற்போது 13 ஆம் அரசியல் திருத்த சட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னின்று நடைமுறைப்படுத்த முயல்வது முஸ்லிம் மக்களிடத்தில் வீணான நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. 1987 ஆண்டு இவ்வாறு வடகிழக்கு இணைக்கப்பட்ட நிலையில் முஸ்லிம்களுக்கு இந்த அரசியல் தேவைப்பாடு ஏற்பட்டிருந்தது.

இதன் பின்னர் தான் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றிருந்தன. இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியும் உருவாக பிரதான காரணமாக அமைந்தது. இந்நிலையில் தமிழ் பேசும் கட்சிகள் சில வட கிழக்கினை இணைப்பது தொடர்பாகவும் மீண்டும் 13 ஆவது அரசியல் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பாகவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு மர்ஹூம் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தமை வரலாறுகள் குறிப்பிடுகின்றன. இவ்வாறான நிலையில் மக்களை மூளைச்சலவை செய்யும் நோக்குடனும் தமது அரசியல் வங்குரோத்து தனத்தினை மீளவும் சரி செய்வதற்காகவும் இச்செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புகின்ற விடயம் அமைந்துள்ளது.

உள்நாட்டு பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்து சென்று தீர்வினை பெற முயல்வதும் இவர்கள் இலங்கையை சவாலுக்கு உட்படுத்தி வருகின்றனர் என்பதே ஆகும். இந்த விடயங்களை தொடர்ச்சியாகவே முன்னெடுக்கின்றனர்.

இவ்வாறான பின்னணியில் மக்களின் நலனுக்காகவே அன்றி அரசியல் சுயலாபங்களுக்காகவே அக்கட்சிகள் செயற்படுகின்றன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025