பல இலட்சங்கள் கோரி தொடர் தொந்தரவு - மகனை அடித்துப் படுகொலை செய்த தந்தை!

Sri Lanka Police Kurunegala Attempted Murder Sri Lanka Sri Lanka Police Investigation
By Kalaimathy Nov 05, 2022 07:14 AM GMT
Report

குருநாகல் பிரதேசத்தில் கோடரியால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவத்தின் சந்தேக நபராக ஓய்வு பெற்ற அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

குருநாகல், புழுவல் பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் ஒருவரை அவரது மகன், திருமண வைபவத்தை நடத்துவதற்காக லட்சக்கணக்கான ரூபா பணம் தருமாறு கோரி தொடர்ந்தும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

ஆத்திரத்தில் கொலை

பல இலட்சங்கள் கோரி தொடர் தொந்தரவு - மகனை அடித்துப் படுகொலை செய்த தந்தை! | Sri Lanka Kurunegala Murder Police Arrest Court Sl

இதனால் கோபமடைந்த தந்தை, மகன், உறங்கிக்கொண்டிருந்த போது கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார். அதனையடுத்து குருநாகல் ரிதிகம காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இவ்வாறு சரணடைந்த 65 வயதான நபரை நேற்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 29 வயதான ஹேரத் முதியன்சலாகே பராக்கிரம பண்டார ஜயலத் என்ற இளைஞனே படுகொலை செய்யப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில், படுகொலை செய்யப்பட்ட இளைஞனே மூத்த மகன் என்பதுடன், அவரது திருமணம் எதிர்வரும் 10 ஆம் திகதி நடக்கவிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், சந்தேக நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, 

ஜயலத் என்ற இளைஞன் பல வருடங்களாக வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்துள்ளதுடன் அவ்வப்போது இலங்கை வந்து சென்றுள்ளார். இறுதியாக திருமணம் செய்து கொள்வதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர் இலங்கை வந்துள்ளார்.

போதைப் பொருளுக்கு அடிமை

பல இலட்சங்கள் கோரி தொடர் தொந்தரவு - மகனை அடித்துப் படுகொலை செய்த தந்தை! | Sri Lanka Kurunegala Murder Police Arrest Court Sl

போதைப் பொருளுக்கு அடிமையான இந்த இளைஞன், தான் சம்பாதித்த பணத்தை போதைக்கே அழித்துள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பணம் இல்லாத காரணத்தினால், திருமண வைபவத்தை நடத்த தந்தையிடம் பணத்தை கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

மகன் தான் விரும்பியது போல் யுவதி ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்ததால், சந்தேக நபரான தந்தையும் தாயும் அதற்கு சம்மதிக்கவில்லை.

இவ்வறான பின்னணியிலேயே வீட்டில் கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த மகனை, நேற்று அதிகாலை சந்தேக நபர் கோடாரியால் தாக்கி கொலை செய்து விட்டு, காவல்துறையிடம் சரணடைந்துள்ளார்.

வாக்குமூலம்

பல இலட்சங்கள் கோரி தொடர் தொந்தரவு - மகனை அடித்துப் படுகொலை செய்த தந்தை! | Sri Lanka Kurunegala Murder Police Arrest Court Sl

65 வயதான இந்த சந்தேக நபர், குருகுல பாடசாலை ஒன்றில் அதிபராக கடமையாற்றியுள்ளார். இதனை தவிர பிரதேச கூட்டுறச்சங்க தலைவராகவும் பதவி வகித்துள்ளார். சந்தேக நபரின் மனைவி ஓய்வுபெற்ற ஆசிரியை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் போதைப் பொருளுக்கு அடிமையான மகனை அதில் இருந்து மீட்க பல முறை முயற்சித்துள்ளதுடன் புனர்வாழ்வுக்கும் உட்படுத்தியுள்ளனர்.

எனினும் மகன் தொடர்ந்தும் போதைப் பொருளை பயன்படுத்தி வந்துள்ளதாக சந்தேக நபர் காவல்துறையினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள தந்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன் கொல்லப்பட்ட மகனின் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக குருநாகல் விசேட சட்டவைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026