இறுதி யுத்தம் என்பது சரியான முறையில் வெல்லப்படாது அரைகுறையாக முடிவடைந்த ஒன்றே!

Batticaloa Sri Lanka Sri Lanka Final War
By Kalaimathy May 19, 2022 10:58 AM GMT
Report

விடுதலைப்புலிகள் ஒரு இயக்கமாக இருந்தாலும் விடுதலைப்புலிகள் என்ற விடயம் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகும். கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற யுத்தம் சரியான வழியில் வெல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

உள்நாட்டு யுத்தம் அல்லது பிரச்சினை என்றால் அது ஒரு பேச்சுவார்த்தை மேசையில் தான் முடிந்திருக்க வேண்டும். இந்த போரின் முடிவு சமாதான முறையில் நிறைவிற்கு கொண்டு வரவில்லை. பெரும் அழிவுகளுடன் தான் நிறைவடைந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தம் என்பது சரியான முறையில் வெல்லப்படாது அரைகுறையாக முடிவடைந்த ஒன்றே! | Sri Lanka Ltte Warpress Meet

வட கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சராக இருந்த வரதராஜ பெருமாள் காலத்தில் ஒரு உறுப்பினராக இருந்துள்ளேன். அதுமாத்திரமன்றி வரதராஜ பெருமாள் தமிழீழத்தை பிரகடனம் செய்த போது வெளிநடப்பு செய்த குழுவிலும் நான் அங்கம் வகித்திருந்தேன்.

அதாவது இந்த நாட்டை பிரிப்பதற்கு ஒருபோதும் நாங்கள் உடன்பட மாட்டோம் எனத் தெரிவித்தே அப்போது நாம் வெளியேறி இருந்தோம். இந்நிலையில் பின்னர் அங்கு பல பிரச்சினைகள் எழுந்தமையினால் நாங்கள் ஐ.பி.கேயின் உதவியுடன் விசேட விமானத்தில் இரத்மலான விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டோம்.

இறுதி யுத்தம் என்பது சரியான முறையில் வெல்லப்படாது அரைகுறையாக முடிவடைந்த ஒன்றே! | Sri Lanka Ltte Warpress Meet

மேலும் விடுதலைப்புலிகள் ஒரு இயக்கமாக இருந்தாலும் அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் விடுதலைப்புலிகள் என்ற உயரிய சிந்தனைகளில் இருந்தார்களா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

அதாவது விடுதலைப்புலிகளின் உயர் மட்டத்தலைவர்கள் என கூறப்படுவோர் தற்போது சிங்கள கட்சிகளின் உயர்பதவிகளில் வந்து இருக்கின்றார்கள். இவ்வாறானவர்களும் விடுதலைப்புலிகளில் கடந்த காலங்களில் அங்கம் வகித்துள்ளார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள முடிகின்றது.

ஆகவே விடுதலைப்புலிகள் என்ற விடயம் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகும். கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற யுத்தம் வெல்லப்பட்டது என்பதற்காகவே ராஜபக்ஸக்களை மக்கள் ஆட்சிக்கு கொண்டு வந்திருக்கின்றார்கள்.

இறுதி யுத்தம் என்பது சரியான முறையில் வெல்லப்படாது அரைகுறையாக முடிவடைந்த ஒன்றே! | Sri Lanka Ltte Warpress Meet

இந்த யுத்தம் வெளிநாடு ஒன்றுடன் செய்யப்படவில்லை. இலங்கை பிரஜைகளுடன் தான் சிறிலங்கா அரசாங்கம் யுத்தம் செய்தது உண்மையாகும். இந்த யுத்தமானது சரியான வழியில் வெல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை.

அதாவது உள்நாட்டு யுத்தம் அல்லது பிரச்சினை என்றால் அது ஒரு பேச்சுவார்த்தை மேசையில் தான் முடிந்திருக்க வேண்டும். ஒரு போர்க்களத்தில் நின்று கொண்டு பொதுமக்களை இராணுவம் சுட்டுத்தள்ளி அல்லது ஒரு விடுதலை இயக்கம் இராணுவத்தை சுட்டுத்தள்ளுவதை ஒரு காலமும் யுத்தமோ சமாதானமோ என்று கூற முடியாது.

இந்த போரின் முடிவு சமாதான முறையில் நிறைவிற்கு கொண்டு வரவில்லை. பெரும் அழிவுகளுடன் தான் யுத்தம் நிறைவடைந்தது. உதாரணமாக தென்னாபிரிக்காவில் 243 இயக்கங்கள் போர் இட்டு வந்திருந்தன. அதில் வெள்ளையர் கறுப்பர் குழு மோதலும் இடம்பெற்றிருந்தது.

இறுதி யுத்தம் என்பது சரியான முறையில் வெல்லப்படாது அரைகுறையாக முடிவடைந்த ஒன்றே! | Sri Lanka Ltte Warpress Meet

நெல்சன் மண்டேலா அந்த காலகட்டத்தில் வெஸ்மன் ரூட்டோ போன்றவரகள் இப்போராட்ட இயக்கங்களுடன் எத்தனையோ பேச்சுவார்த்தைகளை நடத்தி 11 குழுக்களாக மேற்குறித்த இயக்கங்களை ஒருங்கிணைத்தனர்.

இவ்வாறு 11 குழுக்களுடனும் பின்னர் அவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டு பிணக்குகளை தீர்த்து வைத்தனர். இதனால் தான் அவருக்கு கூட நோபல் பரிசு கிடைக்கப்பெற்றிருந்தது. இந்த நாட்டிலும் ஒரு இணக்கப்பாட்டுடன் நடந்து முடிந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்திருந்தால் இவர்களுக்கும் நோபல் பரிசு கிடைக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.

ஆனால் இந்த யுத்தமானது அரைகுறையாக நிறைவடைந்து விட்டது என்பதே உண்மையாகும். சமாதான மேசையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு இந்த யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்படவில்லை. மாறாக பெரும் அழிவு யுத்த அவலத்துடன் தான் இந்த யுத்தம் அரைகுறையாக நிறைவடைந்துள்ளது என்பதை நான் பார்க்கின்றேன் என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026