புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவல்- மீட்கப்பட்ட அபாயகரப் பொருள்!
மன்னார் காட்டுப் பகுதியில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவிலேயே மடுக்கரை காட்டுப் பகுதியில் இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த துப்பாக்கி மீட்கப்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் காவல்துறையினருடன் இணைந்து மடுக்கரை காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி வேட்டைக்கு பயன்படுத்துவது என தெரிய வந்துள்ளது. இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.