வீதியின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டம் - கொந்தளித்த மக்கள்!

Mannar Sri Lanka SL Protest Northern Province of Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Kalaimathy Jul 12, 2022 11:15 AM GMT
Kalaimathy

Kalaimathy

in சமூகம்
Report

மன்னாரில் தனியார் பேருந்து சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச போக்குவரத்து சேவையை முன்னெடுக்க முடியாத வகையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தமது பேருந்துகள் ஊடாக வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னாரில் போராட்டம்

வீதியின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டம் - கொந்தளித்த மக்கள்! | Sri Lanka Mannar Fuel Crisis Protest Peoples Bus

நேற்றைய தினம் மன்னார் டிப்போவிற்கு கிடைக்க பெற்ற எரிபொருள் தனியார் பேருந்து சங்கத்தினருக்கு பகிர்ந்து வழங்கப்படவில்லை. இவ்விடயம் தொடர்பாக உரிய தரப்பினரிடம் அவர்கள் வினவிய போதும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையிலேயே இன்று காலை முதல் தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர் போக்குவரத்து சேவையை இடை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை முதல் வீதி மறிப்பு உட்பட பொதுமக்கள் பாதிக்கப்படும் வகையில் மன்னார் பஸார் பகுதியில் போராட்டம் இடம்பெற்ற போதும் அவ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பிரச்சினைகளை வேடிக்கை பார்த்ததோடு, தடுக்க முயற்சிகள் எவையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மன்னார் டிப்போவுக்கு வழங்கப்பட்ட டீசலில் மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்க பேருந்துகளுக்கும் வழங்குமாறு உரிய தரப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

போக்குவரத்து சபையிடம் எரிபொருள் வழங்க கோரிக்கை

வீதியின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டம் - கொந்தளித்த மக்கள்! | Sri Lanka Mannar Fuel Crisis Protest Peoples Bus

எனினும் அண்மையில் வழங்கப்பட்ட டீசலில் தற்போது வரை 2413 லீற்றர் டீசல் மாத்திரமே தனியார் பேருந்துகளுக்கு வழங்கப்பட்டது. எனினும் அதனை தொடர்ந்து டீசல் தனியார் பேருந்துகளுக்கு வழங்கவில்லை.

தனியார் பேருந்து சங்க உரிமையாளர்கள் மன்னார் டிப்போ அதிகாரிகளிடம் டீசல் கோரிய போதும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 5 ஆம் திகதி காலை தனியார் பேருந்துகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் அரச போக்குவரத்து சேவையை மேற்கொள்ள முடியாத வகையில் தனியார் பேருந்துகளினால் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு தமக்கான எரிபொருளையும் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இருதரப்பு கலந்துரையாடல்

வீதியின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டம் - கொந்தளித்த மக்கள்! | Sri Lanka Mannar Fuel Crisis Protest Peoples Bus

இதனால் போக்குவரத்து சேவைகள் சிறிது நேரம் முழுமையாக பாதிக்கப்பட்டதோடு மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர், இராணுவம், காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது இலங்கை போக்குவரத்து சபையின் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து தனியார் பேருந்து சேவை பேருந்துகளுக்கு டீசல் வழங்குவதற்கு அரச அதிபரால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய மன்னார் சாலைக்கு 6600 லீற்றர் டீசல் வருமாக இருந்தால் அவற்றில் 2500 லீற்றர் டீசலையும், 13200 லீற்றர் டீசல் வருமாக இருந்தால் 5000 லிட்டர் டீசல் தனியார் பேருந்து சேவை பேருந்துகளுக்கு வழங்குவது என இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தனியார் பேருந்து சங்க உரிமையாளர்கள் முன்னெடுத்த பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

மக்கள் பாதிப்பு

வீதியின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டம் - கொந்தளித்த மக்கள்! | Sri Lanka Mannar Fuel Crisis Protest Peoples Bus

இதனையடுத்தே நேற்றைய தினம் போக்குவரத்து சபைக்கு கிடைத்த எரிபொருள் தனியாருக்கு வழங்கவில்லை எனத் தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது அரச போக்குவரத்து சேவையை முன்னெடுக்க முடியாத வகையில் தனியார் பேருந்துகளை வீதியின் குறுக்காக நிறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பேருந்துகளை அவ்வாறு நிறுத்தியமைக்கு மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு, குறித்த தனியார் பேரூந்துளை அவ்விடத்தில் இருந்து அகற்றி அரச போக்குவரத்துச் சேவையை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனால் மக்களுக்கும் தனியார் பேருந்து சங்கத்தினருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டதோடு, தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர் சுமுகமான போக்கு வரத்துச் சேவையை முன்னெடுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

முடங்கிய அரச பேருந்து

வீதியின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டம் - கொந்தளித்த மக்கள்! | Sri Lanka Mannar Fuel Crisis Protest Peoples Bus

இதனால் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருந்த மக்கள் கொதிப்படைந்த நிலையில் தர்க்கத்தில் ஈடுபட்டதோடு அரச போக்குவரத்து சேவையை முன்னெடுக்க முடியாத வகையில் வீதியை மறித்து தரித்து நின்ற தனியார் பேருந்துகளை அகற்ற முயற்சி செய்தனர்.

பின்னர் குறித்த தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள்  பேருந்துகளை அவ்விடத்தில் இருந்து எடுத்துச் சென்றனர்.

அதனை தொடர்ந்து நீண்ட நேரத்தின் பின் அரச போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம்பெற்றது. எனினும் தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர் முன்னெடுத்த போராட்டம் பொது மக்களை பாதிக்காத வகையில் முன்னெடுத்திருக்க வேண்டும் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025