வீதியின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டம் - கொந்தளித்த மக்கள்!

Mannar Sri Lanka SL Protest Northern Province of Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Kalaimathy Jul 12, 2022 11:15 AM GMT
Kalaimathy

Kalaimathy

in சமூகம்
Report

மன்னாரில் தனியார் பேருந்து சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச போக்குவரத்து சேவையை முன்னெடுக்க முடியாத வகையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தமது பேருந்துகள் ஊடாக வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னாரில் போராட்டம்

வீதியின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டம் - கொந்தளித்த மக்கள்! | Sri Lanka Mannar Fuel Crisis Protest Peoples Bus

நேற்றைய தினம் மன்னார் டிப்போவிற்கு கிடைக்க பெற்ற எரிபொருள் தனியார் பேருந்து சங்கத்தினருக்கு பகிர்ந்து வழங்கப்படவில்லை. இவ்விடயம் தொடர்பாக உரிய தரப்பினரிடம் அவர்கள் வினவிய போதும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையிலேயே இன்று காலை முதல் தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர் போக்குவரத்து சேவையை இடை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை முதல் வீதி மறிப்பு உட்பட பொதுமக்கள் பாதிக்கப்படும் வகையில் மன்னார் பஸார் பகுதியில் போராட்டம் இடம்பெற்ற போதும் அவ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பிரச்சினைகளை வேடிக்கை பார்த்ததோடு, தடுக்க முயற்சிகள் எவையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மன்னார் டிப்போவுக்கு வழங்கப்பட்ட டீசலில் மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்க பேருந்துகளுக்கும் வழங்குமாறு உரிய தரப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

போக்குவரத்து சபையிடம் எரிபொருள் வழங்க கோரிக்கை

வீதியின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டம் - கொந்தளித்த மக்கள்! | Sri Lanka Mannar Fuel Crisis Protest Peoples Bus

எனினும் அண்மையில் வழங்கப்பட்ட டீசலில் தற்போது வரை 2413 லீற்றர் டீசல் மாத்திரமே தனியார் பேருந்துகளுக்கு வழங்கப்பட்டது. எனினும் அதனை தொடர்ந்து டீசல் தனியார் பேருந்துகளுக்கு வழங்கவில்லை.

தனியார் பேருந்து சங்க உரிமையாளர்கள் மன்னார் டிப்போ அதிகாரிகளிடம் டீசல் கோரிய போதும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 5 ஆம் திகதி காலை தனியார் பேருந்துகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் அரச போக்குவரத்து சேவையை மேற்கொள்ள முடியாத வகையில் தனியார் பேருந்துகளினால் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு தமக்கான எரிபொருளையும் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இருதரப்பு கலந்துரையாடல்

வீதியின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டம் - கொந்தளித்த மக்கள்! | Sri Lanka Mannar Fuel Crisis Protest Peoples Bus

இதனால் போக்குவரத்து சேவைகள் சிறிது நேரம் முழுமையாக பாதிக்கப்பட்டதோடு மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர், இராணுவம், காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது இலங்கை போக்குவரத்து சபையின் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து தனியார் பேருந்து சேவை பேருந்துகளுக்கு டீசல் வழங்குவதற்கு அரச அதிபரால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய மன்னார் சாலைக்கு 6600 லீற்றர் டீசல் வருமாக இருந்தால் அவற்றில் 2500 லீற்றர் டீசலையும், 13200 லீற்றர் டீசல் வருமாக இருந்தால் 5000 லிட்டர் டீசல் தனியார் பேருந்து சேவை பேருந்துகளுக்கு வழங்குவது என இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தனியார் பேருந்து சங்க உரிமையாளர்கள் முன்னெடுத்த பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

மக்கள் பாதிப்பு

வீதியின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டம் - கொந்தளித்த மக்கள்! | Sri Lanka Mannar Fuel Crisis Protest Peoples Bus

இதனையடுத்தே நேற்றைய தினம் போக்குவரத்து சபைக்கு கிடைத்த எரிபொருள் தனியாருக்கு வழங்கவில்லை எனத் தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது அரச போக்குவரத்து சேவையை முன்னெடுக்க முடியாத வகையில் தனியார் பேருந்துகளை வீதியின் குறுக்காக நிறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பேருந்துகளை அவ்வாறு நிறுத்தியமைக்கு மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு, குறித்த தனியார் பேரூந்துளை அவ்விடத்தில் இருந்து அகற்றி அரச போக்குவரத்துச் சேவையை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனால் மக்களுக்கும் தனியார் பேருந்து சங்கத்தினருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டதோடு, தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர் சுமுகமான போக்கு வரத்துச் சேவையை முன்னெடுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

முடங்கிய அரச பேருந்து

வீதியின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டம் - கொந்தளித்த மக்கள்! | Sri Lanka Mannar Fuel Crisis Protest Peoples Bus

இதனால் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருந்த மக்கள் கொதிப்படைந்த நிலையில் தர்க்கத்தில் ஈடுபட்டதோடு அரச போக்குவரத்து சேவையை முன்னெடுக்க முடியாத வகையில் வீதியை மறித்து தரித்து நின்ற தனியார் பேருந்துகளை அகற்ற முயற்சி செய்தனர்.

பின்னர் குறித்த தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள்  பேருந்துகளை அவ்விடத்தில் இருந்து எடுத்துச் சென்றனர்.

அதனை தொடர்ந்து நீண்ட நேரத்தின் பின் அரச போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம்பெற்றது. எனினும் தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர் முன்னெடுத்த போராட்டம் பொது மக்களை பாதிக்காத வகையில் முன்னெடுத்திருக்க வேண்டும் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, கண்ணாட்டி,, இலுப்பைக்கடவை, London, United Kingdom

08 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் கிழக்கு

08 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Naddankandal, முல்லைத்தீவு, Northampton, United Kingdom

08 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, அக்கராயன், அளவெட்டி

06 May, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கொழும்பு

03 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, பரிஸ், France, London, United Kingdom

04 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி, Mönchengladbach, Germany

09 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, பிரான்ஸ், France

20 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Harrow, United Kingdom, Swansea, United Kingdom

03 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, புளியங்குளம்

27 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம் தெற்கு, தெல்லிப்பழை வீமன்காமம்

30 Apr, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

06 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, வெள்ளவத்தை

07 May, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, சண்டிலிப்பாய், Pickering, Canada

05 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கல்மடு, திருவையாறு

05 May, 2024
மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

06 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, நவிண்டில்

07 May, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

08 May, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வெள்ளவத்தை

07 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Alfortville, France

23 Apr, 2023
மரண அறிவித்தல்

புலோலி, London, United Kingdom

02 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கொழும்பு

06 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், தாவடி

29 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019