இலங்கை எப்போதும் இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது: ரணில் உறுதி
இந்தியாவின் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை எதனையும் செய்யாது என அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்த அவர், சீன கப்பல்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், சீன கப்பல்கள் விவகாரத்தில், இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் நாங்கள் செய்ய மாட்டோம் என வலியுறுத்தியுள்ளார்.
அதிகாரப் போட்டி
அத்தோடு, இந்தியா மற்றும் சீனாவுடனான அதிகாரப் போட்டியில் இலங்கை எப்போதும் தலையிடாது என்றும் அதிபர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

அதவேளை, அனைத்து நாடுகளிலிருந்தும் இலங்கைக்கு பயணிக்கும் இராணுவ கப்பல்கள் இலங்கையின் துறைமுகங்களில் நங்கூரமிடப்படுவதற்கு அனுமதி வழங்கப்படுமெனவும் கடந்த காலங்களிலும் இவ்வாறான அனுமதிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்