பாகிஸ்தான் அரசுக்கேற்ப ஒருபோதும் செயற்படமாட்டோம் - சரத் வீரசேகர வீராப்பு
srilanka
pakistan
sarath weerasekara
By Vasanth
பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு ஏற்றவாறு நாம் செயற்படுவதில்லை. எமது அரசாங்கத்திற்கு ஏற்றவாறுதான் செயற்பட முடியும். இவ்வாறு பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மிரிஹான பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் புர்கா மற்றும் நிகாப் அணிவதை தடை செய்யும் அமைச்சரவை பத்திரத்தில் நான் கைச்சாத்திட்டுள்ளேன்.
அமைச்சரவையில் கலந்துரையாடி, இவ்விடயத்தை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் சென்று பல செயற்பாடுகள் உள்ளன என மேலும் அவர் தெரிவித்தார்.