நாடாளுமன்றத்திற்கு அருகில் பதற்றம்- ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்த காவல்துறை!
சிறிலங்கா நாடாளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிராக இன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நாடாளுமன்ற நுழைவு வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரையே காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பில் பேருந்தில் ஏற்றிச் செல்லப்படுவதை வீடியோ காட்சிகளில் காணக்கூடியதாகவுள்ளது.
போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதையும் அவர்களுடன் செல்லும் அதிகாரிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் படம்பிடிப்பதை அதிகாரிகள் தடை செய்ய முற்பட்டதால், காவல்துறை அதிகாரிகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பேருந்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

