சிறிலங்கா நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ள ரணிலின் முக்கிய திட்டம்!
சிறிலங்கா நாடாளுமன்றில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தினை முன்வைக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து நேற்று அதிபர் அலுவலகத்தில் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு குழுக்களை ஸ்தாபிக்க நடவடிக்கை
மேலும் இடைக்கால வரவு செலவுத் திட்டம் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக்களை உடனடியாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவற்றின் தலைவர்களுக்கு அலுவலக வசதிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு நாட்டுக்கு அரச சேவையில் இருந்து அதி வினைத்திறன் வாய்ந்த சேவை தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.