காணாமல் போயுள்ள ஜே.வி.பி ஆதரவாளர்கள்: விமர்சித்துள்ள ரணில்
மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிப்போம் என நாட்டில் பெருமளவிலான மக்கள் கூறியதாகவும், ஆனால் இன்று அந்த நிலை மாறி இன்று அவர்களைக் கண்டுபிடிக்க முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவுடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கு தெளிவான திட்டமோ தொலைநோக்கு பார்வையோ இல்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அபிவிருத்தி
எதிர்க்கட்சிகள் கூறும் பொய்களை மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகள் வளர்ச்சியடைந்துள்ளது போல் இலங்கையை அபிவிருத்தி செய்ய வேண்டுமெனவும், நாட்டுக்கு ஏற்ற வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening