மத்திய கிழக்கு எதிரொலி! அரச சேவைகளில் ஏற்படப்போகும் மாற்றம்
மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் வலுசக்தி சவால்களை சமாளிக்கும் வகையில், ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பொதுச் சேவைகளை நிகழ்நிலையில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இலங்கை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பொது சேவைகளின் தொடர்ச்சியை உறுதி செய்ய அமைக்கப்பட்ட அமைச்சரவை குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இணையவழியில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மார்ச் 31ஆம் திகதியில் இருந்து டீசல் பயன்பாட்டை 42% வரை குறைத்துள்ளது. இது அரசு நிறுவனங்களில் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
இணையவழி முறை
மேலும், பாடசாலை மட்டத்தில் வலுசக்தி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏப்ரல் 7 மற்றும் 9 திகதிகளில் நடத்தப்பட உள்ளன. பல்கலைக்கழகங்களும் இயன்றவரை நிகழ்நிலையில் செயல்பட்டு வருகின்றன.

அத்தோடு, கிராம உத்தியோகத்தர்களுக்கான நுழைவுப் பரீட்சை உள்ளிட்ட பரீட்சைகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டதாக பொது நிர்வாக அமைச்சு குழுவிடம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நீதி உள்ளிட்ட பல அமைச்சுகள், அத்தியாவசிய ஊழியர்களைப் பணியமர்த்தியும் இணையவழி முறைகளைப் பயன்படுத்தியும் சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன.
சுற்றறிக்கை
மேலும், நீர் விரயத்தை தடுக்கவும் மாற்று நீர் ஆதாரங்களைப் பயன்படுத்தவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மற்றும் க்ளீன் சிறிலங்கா திட்டத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளன.

அதிகாரப்பூர்வப் பணிகளை இணையவழியில் மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் தயாரித்துள்ளதுடன், பொது நிர்வாக அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பின்னர், ஏப்ரல் 20-ஆம் திகதிக்குள் ஒரு சுற்றறிக்கையை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்