அனுர ஆட்சியிலும் தொடரும் காணி அபகரிப்பு : மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்ட நில அளவீடு
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயக்கச்சியில் உள்ள நான்காவது இலங்கை மின்னியந்திர இராணுவ முகாமில் பொது மக்களுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்வதற்காக திட்டமிடப்பட்டது.
அந்த வகையில் குறித்த நில அளவையை எதிர்த்து பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனின் ஒழுங்கமைப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டு இன்றைய தினம் காலை 8 மணியளவில் குறித்த இராணுவ முகாம் முன்றலில் இடம்பெற்றது.
இராணுவம் மற்றும் ஆளும் தரப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் காணியுரிமையாளர்கள், இராணுவம் மற்றும் ஆளும் தரப்புக்கு எதிராக பல பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக பச்சிலைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை இழக்க நேரிடும் என்று கூறினர்.
அளவீட்டு பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்
இதனால் குறித்த அளவீட்டு பணியினை தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன்,சந்திரகுமார், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர், கரைச்சி பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் காணியுரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்