சிறிலங்கா அரசியலில் இன்றிரவு திடீர் திருப்புமுனை - சமுக ஊடகங்கள் முடக்கப்படலாம்; இரகசிய பேச்சுவார்த்தைகள்!
சிறிலங்காவின் புதிய பிரதமராக டலஸ் அழகபெரும, சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, தினேஷ் குணவர்தன ஆகியோரில் ஒருவரை நியமிக்க இரகசிய பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரிலில் இருந்து இன்று தனது பதவி விலகலை அறிவித்தால், இன்றிரவு பிரதம நீதியரசர் முன்னிலையில் அதிபரா பதவியேற்க ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலைமையில் குழப்பங்கள் வரலாம் என கருதியே கொழும்பில் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் நாடு முழுவதும் ஊரடங்கு
அதேவேளை தேவைப்படின் இந்த ஊரடங்கு நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையில், அதிபராக பதவியேற்றதும் அவசர காலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதோடு, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டப்போவதாக ரணில் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, சமூக ஊடகங்கள் சில மணி நேரங்களுக்கு முடக்கப்படும் வாய்ப்பும் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)