அதிபரின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம் - சஜித் பிரேமதாசவின் சகோதரியிடம் விசாரணை
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக சஜித் பிரேமதாசவின் சகோதரிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை வழங்குமாறு கோரி குற்றவியல் விசாரணை திணைக்களம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி பிரேமதாசவுக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.
இதனடிப்படையில் அவர் இன்று முற்பகல் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் சஜித்தின் சகோதரி
வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள துலாஞ்சலி பிரேமதாச,
“தற்போதைய அதிபரின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்க வருமாறு அழைத்தனர்.
நான் வந்து வாக்குமூலம் வழங்கினேன். சம்பவம் நடந்த போது நான் அங்கு ஓரிடத்தில் இருந்தேன்.
விசாரணை அதிகாரிகள் நட்புறவாக உரையாடினர். உண்மையை கூறினால் எந்த பிரச்சினைகளும் இருக்காது. எனக்கு எந்த பிரச்சினையுமில்லை.
ரணிலின் வீடு தீயிடப்பட்டமை தொடர்பில் வாக்கு மூலம்
பல போராட்டங்கள் இருக்கின்றன. போராட்டம் என்பது ஒரு போராட்டமல்ல. ஒவ்வொருவர் தனிப்பட்ட ரீதியில் போராட்டங்களை நடத்தினர்.
விசாரணைகளுக்கு உதவ வந்து வாக்குமூலம் வழங்குமாறு கூறும் போது நாம் வந்து உண்மையை கூறினால், எமக்கு எந்த பிரச்சினையுமில்லை.
அந்த பிரதேசத்திற்கு சென்றிருந்ததால், அழைத்து விசாரித்தனர். வேறு விடயங்கள் இல்லை” என துலாஞ்சலி தெரிவித்துள்ளார்.
