உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் அதிபர் ரணில்!
அதிபர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
இவர் நேற்று(27) இரவு 11.05 அளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச். 179 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சந்திப்புக்கள்
இந்த விஜயத்தின் போது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் தலைவர்களுடன் ஆக்கபூர்வமான சந்திப்புகளில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவம் அவசியமாக காணப்படுவதால், ஜப்பான், சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு இடையே வெளிப்படையான உரையாடல் தேவை என்பதையும் வலியுறுத்தினார்.
இதன் பின்னர், ஜப்பானிய நிதியமைச்சருடன் பேச்சு நடத்திய அதிபர் ரணில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் ஐ.எம்.எப். வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்தார்.
