சவால்களைக் கண்டு தப்பித்து ஓடும் பழக்கம் எங்களிடம் இல்லை- சற்று முன்னர் வெளியான மகிந்தவின் விசேட உரை!
நாட்டு மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இன்று விசேட உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தான் எப்போதும் மக்களின் நலனுக்காகவே செயற்பட்டதாகவும், அரசியல் இலாபங்களுக்காக நாட்டை அராஜகமாக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை. சவால்களை எதிர்கொண்டு சவால்களை சமாளிப்பதுதான் எனது கொள்கை. சவால்களை கண்டு தப்பித்து ஓடும் பழக்கம் எங்களிடம் இல்லை.
அவற்றுக்கான முன்னுதாரணங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எதிர்க்கட்சிகள் அதன் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுகின்றன.
அவர்களுக்குத் தேவையானது அதிகாரம் மட்டுமே. அரச தலைவருக்கு எவ்வித தடையுமின்றி முடிவெடுக்க முடியும். பொதுநலன் கருதி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார்.
நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கை தான் என்னை அரசியலுக்கு வர வைத்தது. இப்போது என்ன செய்வது என்று நான் உங்களிடம் கேட்கிறேன். உங்களுடன் ஒரு முடிவுக்கு வர நாங்கள் தயாராக இருக்கிறோம். முதலில் தாய்நாடு, இரண்டாவது தாய்நாடு, மூன்றாவது தாய்நாடு. உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார்.