கேள்விக்குட்படுத்தப்படும் அதிகார மையம்...பாயும் வன்முறை

Sri Lanka Army Ranil Wickremesinghe Sri Lankan protests Sri Lankan Peoples
By Santhru Jul 22, 2022 06:20 AM GMT
Report
Courtesy: சந்துரு

அதிகாரமையத்தை யாரெல்லாம் கேள்விக்குட்படுத்துகிறார்களோ அவர்கள் மீது வன்முறை பாயும் இது இலங்கைத்தீவிற்க்கு புதியதல்ல!

ஒடுக்குமுறையின் ஆயுதமாகவே பயங்கரவாத தடைச்சட்டமும் ,அவசரகாலசட்டமும் காணப்படுகிறது. பயங்கரவாத தடைச் சட்டம் ஆறு மாத காலத்துக்கென தற்காலிகமாக கொண்டு வரப்பட்டு பின் அவசர அவசரமாக சட்டமாக்கப்பட்டு 43 ஆண்டுகளுக்குமேலாகிறது அதிகாரத்துக்கு வரும் ஒவ்வொருவரும் இதனை மாற்றுகிறறோம் ஒழிக்கிறோம் என கூறி வினைத்திறனாக எதனையும் செய்யவில்லை மாறாக தமக்கான ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்.

அவசர காலம் என்பதனை - விதிவிலக்கான சந்தர்ப்பம், ஆபத்து அல்லது அனர்த்தம் தெளிவானதாக காணப்படும் சந்தர்ப்பம் என பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் வரைவிலக் கணப்படுத்துகிறது. இச்சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தலைக் கையாளும் பொருட்டு சாதாரண சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்படாத விசேட அதிகாரங்கள் அரசுக்கு வழங்கப்படுகின்றன . தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் அத்தியவசியத் தேவைகள் என்பனவற்றைப் பேணும் பொருட்டு - அவசரகால நிலையை, ஸ்ரீலங்கா அதிபர் பிரகடனப்படுத்தலாம்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை அமுல்படுத்தும் வகையில், அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது.இது இலங்கையின் 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 155ஆவது உறுப்புரையினூடாக அவசரகாலச் சட்டத்தினை பிரகடனப்படுத்தப்படும் அதிகாரம் ஸ்ரீலங்கா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான காரணம் ஆட்சிமாற்றம் 

கேள்விக்குட்படுத்தப்படும் அதிகார மையம்...பாயும் வன்முறை | Sri Lanka Protest Today Army Attack People

"கோட்டா கோ கம" போராட்டத்தின் போது ஸ்ரீலங்கா அதிபர் மாளிகை முற்றுகயிடப்பட்டமை ஏதோ ஒரு வகையில் காவல்துறை ,இராணுவம் அமைதிகாத்தது அவர்களின் அமைதிக்கான காரணம் ஆட்சிமாற்றம் என்பதாக எடுத்துக்கொள்ளலாம் .ஆனால் அதே மக்கள் எல்லா இடத்திலும் கை வைப்பதை நாட்டின் கட்டமைப்பை கேள்விக்குட்படுத்தி அதிகார மையத்தை கேள்விக்குறாயாக்கலை விரும்பவில்லை எனலாம் அதே ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் முன் போராட்டக்காரர்கள் முற்றுகை நோக்கத்தோடு வரும்போது ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதும் ,மர்மமான முறையில் வீடு எரிக்ப்பட்டதும் (போராட்டக்காரர்கள் தாம் எரிக்கவில்லை கண்ணீர் புகைகுண்டின் விளைவால் தாம் தண்ணீர் தேடிய போது மின்வெட்டு ஏற்பட்டது பின்னர் மின்சாரம் வந்த போது தீப்பற்றிகாணப்பட்டது என குறிப்பிட்டார்கள் )

தற்போது நாட்டின் 25 மாவட்டத்திலும் பொது மக்களின் அமைதியை பேண ஆயுதம் தாங்கிய படைகளில் அனைத்து பிரதிநிதிகளையும் அதிபர் ரணில் விக்ரமசிங்க அழைத்துள்ளார் என வர்த்தமானி தெரிவிக்கிறது.

நோடீல் கம கலைக்கபட்டு விட்டது, அங்கே இயங்கிக்கொண்டிருந்த Red Cross அமைப்பும் நேற்று வெளியேறியிருந்தது.

இந்த நிலையில் தான் மேற்படி அறிவித்தல் வெளியாகி உள்ளது ,இது ஒரு வகையில் தமிழ் மக்கள் அறிந்த விடையமே.

சிறிலங்கா அதிபர் மாளிகை முற்றுகைச்சம்பவத்தில் தொல்பொருள்சின்னங்கள் திருட்டு ,துப்பாக்கிகள் திருடப்பட்டன அதன் பின் செய்யப்ட்ட முறைப்பாடு விசாரனை என்பன இதன் ஆரம்பமே.

ஐனாநாயகத்திற்கு விரோதமாக செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கேள்விக்குட்படுத்தப்படும் அதிகார மையம்...பாயும் வன்முறை | Sri Lanka Protest Today Army Attack People

சிறிலங்கா அதிபர் ஆனதும் ரணில் அவர்கள் விடுத்த அறிவிப்பு போராட்டத்தில் ஐனாநாயகத்திற்கு விரோதமாக செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதான எச்சரிக்கையே!

அதிகாரமையத்தை யாரெல்லாம் கேள்விக்குட்படுத்துகிறார்களோ அவர்கள் மீது வன்முறை பாயும் இது இலங்கைத்தீவிற்க்கு புதியதல்ல.

1915 சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையில் நடந்ததாக இருக்கட்டும்.பின்னர் சுதந்திரத்தின் பின்னரான தமிழ்மக்கள் மீது கட்டமைக்கப்பட்டதான வன்முறைகளாக இருக்கட்டும் ஜேவிபி யினரால் அதிகாரமையம் கேள்விக்குட்பட்ட போது அவர்கள் மீது பாய்ந்த வன்முறகளாக இருக்கட்டும் (பட்டாலண்டா வதைமுகாம் தம்மக்கள் தம்மை கேள்வி கேட்டாலும் இதே என்பதை உணர்த்தும்) 2009 இன் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை சம்பவங்கள் அதன் பின்னர் முஸ்லிம்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட வன்முறைகள் அதன் தொடர்ச்சியான ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான வன்முறைகள் என இன்று கோட்டா கோ கம வில் போராடியவர்கள் மீது ஆட்சியாளர்களால் கட்டமைக்கபட்ட வன்முறை பிறகு கலவரமாக மாறியதன் தொடர்ச்சி அதிபர் செயலகம் ,நாடாளுமன்றம்,பிரதமர் அலுவலகம் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலை மற்றும் வீடுகள் எரிக்கபட்டமை , ரணிலின் வீடு எரித்தமை ,என ஆட்சி வரலாற்றில் முதன் முறையான பேரெழுச்சியான மக்கள் கிளர்ச்சியாக உருவெடுத்தது.இதுவே ஒரு ஆட்சிமாற்றத்துக்கான வழிகோலியது.

அதிகாரமையத்தை கேள்விகேட்டால் நாளை இது அடிக்கடி தம்மை துன்புறுத்தும் என ஆட்சியாளர்களுக்கு தெரியும் ஆகவே தேவை முடிந்ததும் இதனை நீர்த்துப்போகச்செய்யவேண்டும் அதன் ஆரம்பமே இப்பொழுது முடிக்கிவிடப்பட்டுள்ளது .

சந்தர்ப்பத்திறக்கு ஏற்றபடி தன் முகத்தை காட்டும் ஐனநாயகம்

கேள்விக்குட்படுத்தப்படும் அதிகார மையம்...பாயும் வன்முறை | Sri Lanka Protest Today Army Attack People

உண்மையில் இங்கே தன்னிச்சையாக வீதியில் இறங்கிய இளைஞர்கள் தனித்துவிடப்பட்டுள்ளார்கள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாரெல்லாம் தங்கள் காரியங்களை செய்து முடிக்க எண்ணிணரோ அவர்கள் ஆட்சிமாற்றத்தை செய்து முடித்துவிட்டனர் வெளிப்படையாக சொல்லப்போனால் சீனாவின் ஆதிக்கத்தை விரும்பாத அமெரிக்க மற்றும் இந்திய பின்னணியிலேதான் இது நிகழ்ந்திருக்கிறது.

யாரெல்லாம் கோட்டா கோ கமவை பின்னின்று இயக்கினார்களோ அவர்களாலே பின்வாங்கல் செய்யப்படுகிறது!

ஜேவிபி, முன்னிலை சோசலிச கட்சி, தொண்டுநிறுவனங்கள் , மனிதவுரிமைகள் செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் சங்கம் எல்லோருமே பின்வாங்குகிறார்கள் தனித்துகட்டமைப்பாக இது வளர்ந்தால் ஆபத்தாகிவிடும் என ஆட்சியாளர்கள் அறிவார்கள்.

ஐனநாயகத்திற்கு இரண்டு முகங்கள் உண்டு அது சந்தர்ப்பத்திறக்கு ஏற்றபடி தன் முகத்தை காட்டும் இன்று தன் கோரமுகத்தை ரணில் மூலம் காட்டக்கிளம்பி உள்ளது !அல்லது ரணில் காட்டுகிறார்!

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023