இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த ஆண்டில் தொடக்கத்திலிருந்து நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9 இலட்சத்தை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து (India) வருகை தந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்ட தரவுகளில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலானோர் இந்தியர்கள்
ஜனவரி 1 முதல் மே 6 வரை 904,855 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர், அவர்களின் எண்ணிக்கை 200,796 ஆகும்.
பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
எனினும் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாளாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமானளவு குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |