வரலாற்று சாதனை படைத்த இலங்கையின் சுற்றுலாத்துறை
இலங்கையின் 2025 ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 2018 ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை முறியடித்து சாதனை படைத்துள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் இன்று (29) சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 162 இல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது குறித்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் வரலாற்றில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டான 2018 இல் பதிவாகியிருந்த 2,333,796 சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2025 ஆம் ஆண்டின் 2,333,797 ஆவது சுற்றுலாப் பயணி வந்ததையடுத்து இந்தச் சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை
இந்த வெற்றியானது நாட்டின் சுற்றுலாப் பயணத்தில் ஒரு தீர்மானமிக்க மைல்கல்லாக அமைவதுடன், உலகின் முன்னணி சுற்றுலாத் தலமாக இலங்கை மீதான நம்பிக்கையையும் அதன் மீண்டெழும் சக்தியையும் வெளிப்படுத்துகின்றது.

சுற்றுலாத்துறை இலங்கை பொருளாதாரத்தின் பிரதான தூணாகத் தொடர்ந்து நீடிப்பதுடன், வெளிநாட்டு செலாவணி வருவாய், வேலைவாய்ப்பு மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.
'டித்வா' புயல் அனர்த்தம் போன்ற சவால்களுக்கு மத்தியிலும் இந்த இலக்கை எட்டியமையானது இத்துறை மற்றும் அதன் பங்குதாரர்களின் பலத்தையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |