அரையிறுதி வாய்ப்பை இலங்கை அணி மறக்கவேண்டும்: முரளிதரன்
உலகக் கோப்பையின் எஞ்சிய போட்டிகளில் அரையிறுதிக்குத் தகுதி பெறுவோம் என்பதை மறந்துவிட்டு, எங்களது பாணியில் விளையாட வேண்டும் என்றும், அரையிறுதிக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்றும் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
புள்ளிப்பட்டியலில் இலங்கைக்கு மேலே உள்ள அணிகள் அதிக நிகர புள்ளி விகிதத்தை பேணுவதாகவும், அரையிறுதிக்கு செல்ல மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற வேண்டும் என்றும் முரளிதரன் கூறினார்.
உலக சாம்பியன் அணியை ஓரிரு நாட்களில் உருவாக்க முடியாது
உலக சாம்பியன் அணியை ஓரிரு நாட்களில் உருவாக்க முடியாது, அதற்கு ஐந்து அல்லது ஆறு வருடங்கள் போன்ற நீண்ட கால அவகாசம் தேவைப்படுவதாகவும், விளையாட்டு வீரர்களுக்கு கால அவகாசம் வழங்குவது இன்றியமையாத அம்சம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மஹேலவை நீக்கியிருந்தால்
மேலும், ஒரு வீரர் தோல்வியடைந்தார் என்பதற்காக அணியில் இருந்து நீக்கப்படக் கூடாது எனவும், 2003 உலகக் கிண்ணத்தில் மஹேல ஜயவர்தன தோல்வியடைந்து அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தால், மஹேல போன்ற ஒரு ஜாம்பவான் இலங்கைக்கு இன்று கிடைத்திருக்க மாட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அவிஷ்க பெர்னாண்டோ கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றியதாகவும், இந்தப் போட்டியில் பங்குபற்றவில்லை எனவும் தெரிவித்த முரளிதரன், 1988ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கட்டை ஆரம்பித்த சனத் ஜயசூரிய மற்றும் ரொமேஷ் களுவிதாரண ஆகியோர் பலம் வாய்ந்த வீரர்களாக மாறியதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 11 மணி நேரம் முன்