சிறிலங்காவிற்கு அனைத்துலக அரங்கில் விழும் அடிமேல் அடி
சிறிலங்கா காவற்துறையினருக்கு பயிற்சி வழங்கும் செயற்திட்டம் முற்றாக கைவிடப்படுவதாக ஸ்கொட்லாந்து காவற்துறை நேற்று அறிவித்துள்ளமை சிறிலங்காவுக்கு கிட்டியுள்ள புதிய அடியாக மாறியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் ஒடுக்குமுறைகளை செய்வதாக பிரித்தானியா தனது பூகோள மனித உரிமை நிலைமை அறிக்கையில் விமர்சனத்தை தெரிவித்திருந்த்து.
சிறிலங்கா காவற்துறையினருக்கு பயிற்சி வழங்கும் தமது செயற்திட்டத்தை முற்றாக கைவிடும் இந்தமுடிவு குறித்து சிறிலங்காவில் உள்ள பிரித்தானிய தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இயன் லிவிங்ஸ்ரோன் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா காவற்துறை மேற்கொள்ளும் சித்திரவதைகள், சட்டத்திற்கு புறம்பான கொலைகள் மற்றும் உயர்அதிகாரிகளின் முறைகேடுகள் பற்றிய தகவல்களை மையப்படுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இயன் லிவிங்ஸ்ரோன் தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,