உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான தீர்ப்பு: வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்

Trincomalee Ranil Wickremesinghe Harin Fernando
By Aadhithya Aug 22, 2024 04:45 PM GMT
Report

உள்ளூராட்சிமன்ற தேர்தல் சம்மந்தமான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றில் பதியப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினரும் திருகோணமலை (Trincomalee) மாவட்ட அமைப்பாளருமான சட்டத்தரணி அருண் ஹேமச்சந்திரா  (Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கிண்ணியா கட்சி காரியாலயத்தில் இன்று (22) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் “கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு போதாமை உள்ளிட்ட பல காரணங்களை காட்டி ஒத்தி வைக்கப்பட்டது.

தொழில்துறை திட்டங்களோடு அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட வேண்டும் : சஜித் எடுத்துரைப்பு

தொழில்துறை திட்டங்களோடு அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட வேண்டும் : சஜித் எடுத்துரைப்பு

தேசிய மக்கள் சக்தி

இதன் பின்னால் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று முழு மனதுடன் செயற்பட்டமை பல்வேறு தரப்பட்ட பேசு பொருளாக அந்த காலத்தில் பேசப்பட்டது. ஆகவே இதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி உட்பட மூன்று அமைப்புக்களும் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவினை சமர்ப்பித்தது குறிப்பாக அடிப்படை உரிமை மீறல் மனுவாக தாக்கல் செய்யப்பட்டது .

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான தீர்ப்பு: வலியுறுத்தப்பட்டுள்ள விடயம் | Sri Lanka Supreme Court Local Elections

இன்று அதற்கான தீர்ப்புவெளிவந்தது இதன் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க உட்பட தேர்தல் ஆணைக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த அதிகாரிகள் உட்பட பலர் தமது கடமைகளை செய்ய தவறியிருக்கிறார்கள் என்ற தீர்ப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.

இலங்கை அரசியலமைப்பின் 33ஆவது சரத்தின் ( D ) அம்சத்தின் பிரகாரம் ஜனாதிபதி என்னும் நபர் இலங்கையில் நீதியான தேர்தலை நடாத்த அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணிலுடன் இ.தொ.கா புரிந்துணர்வு உடன்படிக்கை

ஜனாதிபதி ரணிலுடன் இ.தொ.கா புரிந்துணர்வு உடன்படிக்கை

தேர்தல் காலப்பகுதி

ஜனாதிபதி, நிதியமைச்சராக கடமை புரிந்த காலத்தில் ஒரு நிதியமைச்சர் என்ற அடிப்படைமில் அவர் தேர்தல் காலப்பகுதியில் சரியான நிதியினை ஒதுக்கீடு செய்யாமல் அவர் இவ்வாறு தமது கடமையில் இருந்து விலகியிருப்பதனை உச்ச நீதிமன்றம் ஒரு குற்றமாக கருதியிருக்கின்றது. இதன் அடிப்படையில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரனை ஒன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான தீர்ப்பு: வலியுறுத்தப்பட்டுள்ள விடயம் | Sri Lanka Supreme Court Local Elections

இலங்கையின் அரசியல் அமைப்பை மீறிய ஒரு ஜனாதிபதியாக இந்த ஜனாதிபதி வரலாற்றில் இடம் பெறுகின்றார். பாரிய அரசியல் நெருக்கடி தற்போது ஏற்பட்டு கட்சித் தாவல்களும் இடம் பெற்றுள்ளது ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வரிதாக்கிய ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) மற்றும் மனச நாணயக்கார (Manusha Nanayakara) போன்றவர்களுக்கு ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டு எரி பொருள் , வாகனம் என பல வரப்பிரசாதங்களை வழங்கியுள்ளார். ஜனாதிபதியின் அதிகார வெறி நாட்டை பின்னோக்கி கொண்டு செல்வதற்கு வழி வகுத்துள்ளது .

இன்றைய தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உயர் நீதிமன்ற தீர்பாக மாறியுள்ளது.எதிர் கட்சி தலைவர் கூட ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றப் பிரேரனை கொண்டு வரலாம். அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தேசிய மக்கள் சக்தியுடன் கைகோருங்கள்" என்றார்.

தேர்தல் திருவிழா ஆரம்பம் : வாக்குச் சீட்டு விநியோக திகதி அறிவிப்பு

தேர்தல் திருவிழா ஆரம்பம் : வாக்குச் சீட்டு விநியோக திகதி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011