திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள அதிசொகுசு கப்பல்!
ஐரோப்பிய நாடுகளில் இருந்து கடந்த 24 ஆம் திகதி நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த MV Silver Spirit என்ற பயணிகள் சொகுசு கப்பல் இன்று திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தனர்.
கொழும்பில் உள்ள சுற்றுலா இடங்கள், இசை நிகழ்வுளை ரசித்த பின்னர் திருகோணமலை நோக்கி பயணித்தை ஆரம்பித்த குறித்த கப்பலில் 336 பயணிகள் மற்றும் 404 பணியாளர்களும், இன்று காலை திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தனர்.
பயணிகள் சுற்றுலா கப்பல்
அதிகளவான சுற்றுலாப் பயணிகளை உள்ளடக்கிய மிகப்பெரிய பயணிகள் கப்பல் இதுவாகும். குறித்த சுற்றுலா பயணிகள் திருகோணமலை, சிகிரியா, தம்புள்ளை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.
தாய்லாந்து நோக்கி பயணம்
இலங்கை பயணத்தை முடித்து நாளை அதிகாலை தாய்லாந்து, நோக்கி பயணிப்பார்கள். தொடர்ந்து மலேஷியா, சிங்கப்பூருக்கும் செல்லவுள்ளனர்.
இதேவேளை கப்பலின் வருகையால் 21 இலட்சம் ரூபா வருமானம் கிடைக்கும் என திருகோணமலை துறைமுக வதிவிட முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
