வவுனியாவில் பதற்றம்; தலை சிதறிப் பலியான இந்திய நாட்டவர்- ஸ்தலத்திற்கு விரைந்த தடயவியல் காவல்துறையினர்!
வவுனியா நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரில் பஜார் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக நேற்றைய தினம் தலை சிதறிய நிலையில் காயங்களுடன் ஒருவர் காணப்பட்டுள்ளார். அதனையடுத்து உடனடியாக மக்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் இரவு அனுமதித்தனர்.
எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உயிரிழப்பு
நேற்று இரவு 11.45 மணியளவில் வவுனியா பஐார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தின் முன்பகுதியில் தலை சிதறிய நிலையில் வீதியின் நடைபாதையில் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதனை அவதானித்த மக்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்த நிலையில் குறித்த நபர் வர்த்தக நிலையத்தின் மூன்றாம் மாடி விடுதி கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்திய நாட்டவர்
சடலமாக மீட்க்கப்பட்ட நபர் இந்தியா நாட்டை சேர்ந்த 36 வயதுடைய சன்டிப் மலிக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் விடுதியில் தங்கியிருந்து நகைவேலை செய்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் மாடியிலிருந்து விழுந்து இறந்துள்ள நிலையில் இது கொலையா தற்கொலையா, அல்லது தவறி வீழ்ந்து இறந்துள்ளாரா என்ற கோணங்களில் தடயவியல் காவல்துறைியன் உதவியுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.