வவுனியாவில் மாயமான இளைஞன் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு!
Sri Lanka Police
Missing Persons
Vavuniya
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kalaimathy
வவுனியா குருமன்காட்டில் வசித்து வந்த கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞன் கடந்த சில தினங்களாக காணாமல் போய்விட்டதாக அவரது உறவினர்கள் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டனர்.
எனினும் நேற்று மாலை குறித்த இளைஞர் வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டினால் யாரிடமும் சொல்லாமல் யாழ்ப்பாணத்திலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் தற்போது காணாமல் போய்விட்டதாக செய்திகள் பரவியதை அடுத்து மீண்டும் திரும்பி வந்துவிட்டார் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞனை இன்று காலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 5 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்