முக கவசம் அணியாத பெண் பாதுகாப்பு உத்தியோகத்தரால் முரண்பாடு- சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை!
வவுனியா நகரில் அமைந்துள்ள சதோச கிளையில் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றும் பெண் முக கவசமின்றி கடமையில் ஈடுபட்டுள்ளதால் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த கிளையில் மக்கள் அதிகளவில் வந்து போகும் நிலையில் இன்று காலை அங்கு பொருள் கொள்வனவு செய்ய வந்தவருக்கும் ஊழியர் ஒருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல்துறையினர் அங்கு சென்று குறித்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் போது, அங்கு பணிபுரியும் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் முக கவசத்தினை தனது உடையில் வைத்துள்ள நிலையில் காவல்துறையினருக்கு முன்பாகவும் முக கவசமின்றியே காணப்பட்டார்.
இதேவேளை பொருட்களை கொள்வனவு செய்ய வந்தவர்களும் குறித்த சதொச கிளையில் சில ஊழியர்கள் முக கவசமின்றியே கடமையில் ஈடுபடுவதாக தெரிவித்ததோடு, இது தொடர்பில் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

