சமநிலையில் முடிவடைந்தது இலங்கை எதிர் பங்களாதேஷ் முதல் டெஸ்ட்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
பங்களாதேஷ் நகரின் சட்டோகிராம் ஜாஹுர் அகமது சௌத்ரி மைதானத்தில் கடந்த 15 ஆம் திகதி குறித்த டெஸ்ட் போட்டி ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 153 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 397 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் அஞ்சலோ மத்யூஸ் 199 ஓட்டங்களும், தினேஷ் சந்திமால் 66 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.
பந்து வீச்சில் நயீம் ஹாசன் 30 ஒவர்களை வீசி 6 இலக்குகளை கைப்பெற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 170.1 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 465 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் டமிம் இக்பால் 133 ஓட்டங்களும், முஸ்ஃபகீர் ரகீம் 105 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர். பந்து வீச்சில் அசித்த ஃப்ரெனாண்டோ 26 ஓவர்களை வீசி 4 இலக்குகளை கைப்பெற்றினார்.
இரண்டணாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை 90.1 ஓவர்களில் 6 இலக்குகளை இழந்து 266 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் நாள் நிறைவடைந்து போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
ஆட்டநாயகனாக முதலாவது இன்னிங்ஸில் 199 ஆட்டங்களை பெற்ற அஞ்சலோ மத்யூஸ் தெரிவானார்.
