போர்க்குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வா தொடர்பில் மீண்டும் பிரித்தானியாவுக்கு அழுத்தம்!

Shavendra Silva Sri Lanka Sri Lanka Final War United States of America United Kingdom
By Kalaimathy Aug 19, 2022 06:03 AM GMT
Report

சிறிலங்கா இராணுவ தளபதி சவேந்திர சில்வா உட்பட்ட இனம்காணப்பட்ட யுத்த குற்றவாளிகளை, பிரித்தானிய அரசு தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வேல்ஸ் அரசாங்கம் (Government of Wales) மற்றும் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் நோக்கில் முக்கிய இராஜதந்திர சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு, வேல்ஸ் பகுதியிலுள்ள சினோன் வல்லி (Cynon Valley) என்ற பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் பெத் வின்ரர் (Hon Beth Winter MP)  உடன் கடந்த புதன்கிழமை (17.08.2022) மாலை 4:30 மணியளவில் zoom இணைய வழியாக இடம்பெற்றுள்ளது.

சவேந்திர சில்வாவை தடை செய்ய பிரித்தானியாவிடம் கோரிக்கை

போர்க்குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வா தொடர்பில் மீண்டும் பிரித்தானியாவுக்கு அழுத்தம்! | Sri Lanka War Crime Shavendra Silva United Kingdom

இலங்கையில் யுத்தத்தினாலும் சித்திரவதையாலும் பாதிக்கப்பட்டு, உயிர் பாதுகாப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறி பிரித்தானியாவில் அடைக்கலம் கேட்க நிர்பந்திக்கப்பட்டிருக்கும் தமிழர்களில் வேல்ஸ், சினோன் வல்லி பகுதியில் வாழ்பவர்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பை மனித உரிமை செயற்பாட்டாளரும் மூத்த சட்ட ஆலோசகருமான திரு கீத் குலசேகரம் தலைமை தாங்கி, நடத்தியிருந்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இலங்கையில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் மற்றும் யுத்த குற்றங்களுக்காகவும், தற்போதும் இலங்கையில் தொடரும் ஆட்கடத்தல் மற்றும் சித்திரவதைக்கு பொறுப்பு கூறவேண்டிவர் என்ற அடிப்படையிலும்,  சிறிலங்கா இராணுவ தளபதி சவேந்திர சில்வா உட்பட்ட இனம்காணப்பட்ட யுத்த குற்றவாளிகளை, பிரித்தானிய அரசு தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 அமெரிக்காவால் முடிந்தது ஏன் பிரித்தானியாவால் முடியாது?

போர்க்குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வா தொடர்பில் மீண்டும் பிரித்தானியாவுக்கு அழுத்தம்! | Sri Lanka War Crime Shavendra Silva United Kingdom

இதன்போது இலங்கையில் இடம்பெற்ற இறுதியுத்தத்தில் பாரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடைசெய்ய வேண்டுமெனவும் அவர்களை சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்த வேண்டுமெனவும் இதன் மூலமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடியுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் விசேடமாக இலங்கையின் தற்போதைய இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவினை பிரதான போர்க்குற்றவாளிகளில் ஒருவர் என உறுதிசெய்து அமெரிக்கா அவர் மீது பயணத்தடை விதித்தது போல் பிரித்தானியாவும் தடை விதிக்க வேண்டுமெனவும் அமெரிக்காவினால் அதனை செய்ய முடியுமாயின் ஏன் பிரித்தானியாவால் செய்ய முடியாது போனது என கீத் குலசேகரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சவேந்திர சில்வா மீதான தடையை விரைவுபடுத்த உறுதியளிப்பு

போர்க்குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வா தொடர்பில் மீண்டும் பிரித்தானியாவுக்கு அழுத்தம்! | Sri Lanka War Crime Shavendra Silva United Kingdom

மேலும் பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளருக்கு சவேந்திர சில்வா மீதான தடையை கோரி ஏற்கனவே பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியது போல் தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பில் தாங்களும் பிரித்தானிய அரசை வலியுறுத்த வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இறுதியாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், தான் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு இது தொடர்பில் அழுத்தம் கொடுப்பதாகவும், இது தொடர்பாக நாடாளுமன்ற விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஆதரவினை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததுடன் சவேந்திர சில்வா மீதான தடை நடவடிக்கையை விரைவுபடுத்தி இலங்கையில் தற்போது தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இனவழிப்பு செயற்பாடுகளை நிறுத்துவதற்கு சர்வதேச ரீதியில் அழுத்தங்களை பிரயோகிக்க உதவுவதாகவும் உறுதியளித்தார்.

இந்த இணையவழி சந்திப்பில் தொழிற்கட்சிக்கான தமிழர்கள் (Tamils For Labour) என்ற அமைப்பின் தலைவரான சென்.கந்தையா கலந்து கொண்டு சிறப்புக்கருத்துக்களை வழங்கியதுடன் The Sri Lanka campaign for Peace and Justice (SLC) அமைப்பின் பிரதிப்பணிப்பாளர் பென்ஜமின் குமார் மொறிஸ் (Benjamin Kumar Morris) மற்றும் Redress அமைப்பின் சட்ட அதிகாரி மெகன் சிமித் (Megan Smith) ஆகியோர் பிரதான பேச்சாளர்களாக கலந்துகொண்டு கருத்துக்களை பரிமாறினர்.

இதன் போது, சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் சித்திரவதைக்குட்பட்டு தப்பிவந்துச் சென்றவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026