அவதானமாக இருங்கள்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
Sri Lanka
Weather
People
By Vasanth
இன்று இரவு நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, அம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும், சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் இன்று இரவு 100 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா, மத்திய மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
இதனால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி