நெருக்கடியில் சிறி லங்கன் எயார் லைன்ஸ் :60 விமானிகள் பதவி விலகல்
Food Shortages
SriLankan Airlines
Sri Lanka Economic Crisis
By Sumithiran
சிறி லங்கன் எயார் லைன்ஸில் பணியாற்றும் விமானிகள் பதவி விகுவதால் குறித்த நிறுவனம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கடந்த வருடம் 60 விமானிகள் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏறபட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பொருட்களின் விலைகள் அதிகரிப்பு, சம்பளத்தில் வரி அறவீடு மற்றும் நாட்டில் உறுதியற்ற தன்மை காரணமாக அவர்கள் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கடும் விமானிகள் பற்றாக்குறையை சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் எதிர்கொண்டுள்ளது.
மாற்று ஏற்பாடு
அந்த வகையில் விமானிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக வெளிநாட்டு விமானிகளை நியமிக்கவுள்ளதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இதற்கு அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி திரு.ரிச்சர்ட் நட்டால் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்