வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கையர் கட்டுநாயக்காவில் அதிகாலைவேளை கைது
வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கையர் ஒருவர் இன்று (07) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
42 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் சென்ற நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாலைவேளை வருகை
கொழும்பு, வெல்லம்பிட்டியில் வசிக்கும் 48 வயதுiடய ஓட்டுநரான இவர். இன்று அதிகாலை 12.45 மணிக்கு துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஃப்ளை துபாய் விமானம் FZ-569 மூலம் வந்திருந்தார்.

தனது சூட்கேஸிலும் ஒரு அட்டைப் பெட்டியிலும் 28,000 "பிளாட்டினம்" சிகரெட்டுகளை எடுத்துச் சென்றபோது அவர் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளார்
பயணி காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக 12/10 அன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |