பிரித்தானியாவில் இலங்கை தமிழ் பெண்ணுக்கு மேன்முறையீட்டில் கிடைத்த வெற்றி
பிரித்தானியாவில் இலங்கை தமிழ் தாய் ஒருவர் தனது புகலிடம் கோரல் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டில் வெற்றி பெற்றுள்ளார்.
2021 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு வந்த குறித்த தாய், தனது குடும்பத்திற்கு தமிழீழ விடுதலை புலிகளுடன் உள்ள தொடர்புகள் காரணமாக இலங்கையில் கைது செய்யப்படலாம் என்றும் நீதிமன்றில்தெரிவித்திருந்தார்.
பயணம் செய்யத் தகுதியற்றவராக்குகிறது
மேலும், அவரது மோசமான மனநலம் அவரைப் பயணம் செய்யத் தகுதியற்றவராக்குகிறது என்றும் அவர் வாதிட்டார்.
எனினும் முந்தைய தீர்ப்பாயம் அவரது கூற்றை நிராகரித்தது, அவர் நம்பகமானவர் அல்ல என்றும், அவரது நான்கு மகள்களில் ஒருவருடன் பயணம் செய்யலாம் என்றும் கூறியது.
வழக்கை மீண்டும் முழுமையாக விசாரிக்க அனுமதி
ஆனால் மருத்துவ அறிக்கை அவருக்கு கடுமையான மனச்சோர்வு, பதற்றம் மற்றும் தற்கொலை அபாயம் இருப்பதாகக் காட்டியது.
முதல் தீர்ப்பாயம் இந்த ஆதாரத்தை முறையாகக் கருத்தில் கொள்ளவில்லை என்று தீர்ப்பளித்த மேல் நிலை தீர்பாயத்தின் நீதிபதி இந்த வழக்கை மீண்டும் முழுமையாக விசாரிக்க அனுமதித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

