ராசியானவர் ரணில் - எனது தம்பி மகிந்த அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும்! அண்ணன் சமல் பகிரங்க கோரிக்கை
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமது இரண்டு வருட பதவிக் காலத்தின் பின்னர் அரசியலில் இருந்து ஒய்வு பெற வேண்டும். இதுவே சிறந்த செயற்பாடாக இருக்கும். இல்லையேல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கும் என்று முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னா் ஒவ்வொருவருக்கும் பொறுப்புக்கள் உள்ளன.
இந்தநிலையில், 1939ஆம் ஆண்டு டொனமூர் அரசியலமைப்பை போன்று குழு முறை அமைக்கப்பட்டு, அமைச்சர்கள் தெரிவுசெய்யப்பட்டால், தேசிய ஐக்கிய அரசாங்க அமைப்பின் ஊடாக செயற்படமுடியும் என்று இது தொடர்பில், புதிய அரசியலமைப்புக்குள் திருத்தங்கள் செய்யப்படவேண்டும்.
பொருளாதாரம் தொடர்பில், அதிகாரிகளுக்கும் பொறுப்பு உள்ளது. 1994ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை பிபி ஜெயசுந்தர, நிதியமைச்சின் செயலாளராக செயற்பட்டார்.
இதன் காரணமாக 2001ஆம் ஆண்டு, மறை பொருளாதாரத்தை இலங்கை பெற்றது. 2005ம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை பிபி ஜெயசுந்தர, நிதியமைச்சின் செயலாளராக பணியாற்றினார்.
இதன் காரணமாக 2015ஆம் ஆண்டு இலங்கை, கடன் பொருளாதாரத்தை பெற்றது. இதன்பின்னர் 2019 முதல் 2022ஆம் ஆண்டு வரை பிபி ஜெயசுந்தவினால் இலங்கைக்கு திவால் பொருளாதாரம் கிடைத்தது.
இதேவேளை அலரிமாளிகையில் இருந்து காலிமுகத்திடல் போராட்டம் மீது தாக்குதல் நடத்த சென்றவர்களை ஏன் காவல்துறையினர் தடுக்கவில்லை என்று ஏன் கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமது இரண்டு வருட பதவிக் காலத்தின் பின்னர் அரசியலில் இருந்து ஒய்வு பெற வேண்டும். இதுவே சிறந்த செயற்பாடாக இருக்கும். இல்லையேல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கும்.
இன்று அவர் 50 வருட அரசியல் வாழ்க்கையில் செய்த அர்ப்பணிப்புக்கள் எல்லாமே இல்லாமல் போயுள்ளன. எனவே அரசியலில் பதவியை ஏற்றுக்கொள்கின்ற அதேநேரம் விட்டுக்கொடுக்கவும் பழகவேண்டும்.
இதற்கிடையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க மிகவும் ராசியானவர் என்றும் சமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
