ஆட்சிப்பீடத்தில் ரணில்! தமிழர்களுக்கு விழுந்த பலத்த அடி
தமிழ் கட்சிகள் மோசமான தவறு
சிறிலங்கா அதிபர் தெரிவில் தமிழ் கட்சிகள் மோசமான தவறுகளை இழைத்திருக்கின்றன என மூத்த அரசியல் ஆய்வாளரும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவருமான சி.ஆ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
எமது ஊடகத்தின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.
அதிபர் தெரிவில் இருவர் முக்கியமான வேட்பாளர்கள். அவ்விரு வேட்பாளர்கள் மத்தியிலும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகள் அடங்கிய கோரிக்கைகளை முன்வைத்து பேரம் பேசியிருக்க வேண்டும்.
இரண்டு வேட்பாளர்களும் அக்கோரிக்கைகளை ஏற்க மறுத்திருந்தால், தமது நிலைப்பாட்டை கூறிவிட்டு ஒதுங்கியிருக்க வேண்டும்.
சர்வதேச கவன குவிவு

இது சர்வதேச கவனத்தை குவித்திருக்கும். ஆனால், அது நடக்கவில்லை என ஜோதிலிங்கம் கூறியுள்ளார்.
சமகால அரசியல் அதிர்வுகள், அதிபர் தெரிவில் தமிழர் தரப்பின் நிலைப்பாடு, தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகள் முன்வைக்கப்பட்ட விதம் என அவர் பகிர்ந்து கொள்ளும் விடயஙகள் காணொளி வடிவில்,