வேலைநிறுத்தத்தில் குதிக்கப்போகும் பாடசாலை அதிபர்கள்
Ministry of Education
Sri Lankan Peoples
Sri Lankan Schools
By Dilakshan
பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் காணப்பட்டால் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு அதிபர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் அரசு அதிகாரிகளை பலிகடாவாக்கும் செயல்முறைக்கு எதிராக, ஜூன் 15 ஆம் திகதிக்கு பிறகு, அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் குறித்து தகவல் கிடைத்தால், அதிபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று கல்வி அமைச்சகம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
நாட்டில் டெங்கு அதிகரித்து வருகிறது, மேலும் பல பாடசாலை மாணவர்களுகம் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
