அவுஸ்திரேலிய பிரதமரை சந்திக்க இலங்கையரின் புதிய முயற்சி
Sri Lanka
Australia
By Jaso
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர் ஒருவர் இன்று தனி நடை பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
நாட்டில் அகதிகளாக தங்கியுள்ள அனைவருக்கும் நிரந்தர வதிவிடத்தை வழங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி அவர் இந்த நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.
நீல் பாரா என்ற இலங்கையரால் இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்காக அவர் ஏறக்குறைய 1000 கிலோமீற்றர் நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாளொன்றுக்கு சுமார் 30 கிலோமீற்றர்

அவர் பல்லாரத்தில் இருந்து சிட்னியில் உள்ள பிரதமர் அலுவலகம் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் 8 வருடங்களாக விசா ஏதும் இன்றி நாட்டில் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளொன்றுக்கு சுமார் 30 கிலோமீற்றர் தூரம் பயணித்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதி பிரதமரிடம் தனது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்க திட்டமிட்டுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்