தனுஷ்கோடியில் மயங்கிக் கிடந்த இலங்கையர்கள் - கவலைக்கிடமான நிலை (படங்கள்)
இலங்கையில் இருந்து இன்று திங்கட்கிழமை (27) அதிகாலை, படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீட்கப்பட்டு இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எனினும் குறித்த இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிய வருகிறது.
மன்னார் முருங்கன் பிட்டி பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி மற்றும் சிவன், ஆகிய வயோதிப தம்பதிகளான இருவருமே இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர்.
தனுஷ்கோடியில் மயங்கிக் கிடந்த இலங்கை தம்பதிகள்
மருத்துவ சிகிச்சையில் உள்ள இருவரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜான் டாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டதோடு, அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இருவரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதால் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார்.
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையில் 85இற்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.






