லண்டனுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர் உட்பட புலம்பெயர் தொழிலதிபர் கைது!

London Sri Lankan Peoples United Kingdom India
By Dilakshan Jan 21, 2026 08:17 AM GMT
Report

பெங்களூரு கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கழிப்பறையில் பிரித்தானிய விமானத்தில் செல்வதற்கான நுழைவுச் சீட்டை ரகசியமாக வழங்கி, இலங்கையர் ஒருவரை நாட்டை விட்டு கடத்த முயன்றதற்காக புலம்பெயர் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் ஜனவரி 18 ஆம் திகதி பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் இந்திய காவல்துறையின் காவலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் சட்டவிரோதமாக லண்டனுக்கு பயணம் செய்த இலங்கையரான ஷருசன் குணசேகரன் என்ற நபர் அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நந்தன குணதிலக்கவின் மரணத்தில் வலுத்துள்ள சந்தேகம்!

நந்தன குணதிலக்கவின் மரணத்தில் வலுத்துள்ள சந்தேகம்!


பாதுகாப்பு சோதனைகள்

மேற்கு லண்டனைச் சேர்ந்த 52 வயதான தொழிலதிபர் கந்தையா ராஜகோபால், பிரித்தானியாவுக்குள் நுழைய செல்லுபடியாகும் விசா இல்லாததால் ஷருசன் குணசேகரன் என்ற இலங்கையரிடம் தனது விமான நுழைவுச் சீட்டை கொடுத்துள்ளார்.

லண்டனுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர் உட்பட புலம்பெயர் தொழிலதிபர் கைது! | Sri Lankan Who Tried To Jump To Uk Arrested

இதன்போது, சுற்றுலா விசாவில் இந்தியா சென்றிருந்த கந்தையா, லண்டனுக்கு விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தை முன்பதிவு செய்திருந்தார், அதே நேரத்தில் ஷருசன் சிங்கப்பூருக்கு இண்டிகோ விமானத்தை முன்பதிவு செய்திருந்தார். 

விமான நிலைய பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு இருவரும் முனையத்தில் உள்ள ஒரு கழிப்பறையில் சந்தித்து விமான பற்றுச்சீட்டுகளை மாற்றிக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கந்தையாவின் நுழைவுச் சீட்டை பயன்படுத்தி சாருசன் லண்டனுக்குச் சென்றிருந்தாலும், விமான நிலைய வளாகத்தில் கந்தையா சுமார் எட்டு மணி நேரம் சந்தேகத்திற்கிடமாக இருப்பது மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரின் கவனத்திற்கு வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கையர்

குடிவரவு அதிகாரிகள் விசாரித்தபோதும், விமான நிறுவனத்திடமிருந்து வந்த தகவல்களை உறுதிப்படுத்தியபோதும், கந்தையாவின் இருக்கையில் மற்றொரு நபர் பயணம் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

லண்டனுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர் உட்பட புலம்பெயர் தொழிலதிபர் கைது! | Sri Lankan Who Tried To Jump To Uk Arrested

அதன்போது, சாருசன் லண்டனுக்கு பயணிக்க உதவ திட்டமிட்டதாகவும், பின்னர் அவர் இலங்கைக்குத் திரும்புவதற்காக ஒரு நுழைவுச் சீட்டை முன்பதிவு செய்ததாகவும் அவர் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்திய அதிகாரிகள் வழங்கிய தகவலின் பேரில், பிரித்தானிய விமான நிலைய அதிகாரிகள் சாருசனை வந்தவுடன் கைது செய்து, இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

30 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வரும் கந்தையா, 2012 ஆம் ஆண்டு திருகோணமலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாகவும், குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், தற்போது அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

விகாரைகளில் கை வைக்க வேண்டாம் - ரணில் NPP அரசுக்கு எச்சரிக்கை

விகாரைகளில் கை வைக்க வேண்டாம் - ரணில் NPP அரசுக்கு எச்சரிக்கை

கனடா PR குடியேற்ற திட்டத்தில் அதிரடி மாற்றம் - அரசின் அறிவிப்பு

கனடா PR குடியேற்ற திட்டத்தில் அதிரடி மாற்றம் - அரசின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026