இலங்கைப் பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றிய வெளிநாட்டவர் சிக்கினார்
sri lanka
people
facebook
By Shalini
பேஸ்புக் மூலம் தம்மை வெளிநாட்டவர் என அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் மாத்தறை பகுதியில் உள்ள பெண்ணை நம்பவைத்து ஏமாற்றி பணம் பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுகேகொடவில் காவல்துறை கணினி குற்றப் பிரிவினரால் குறித்த நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து ஒரு பொருள் வந்திருப்பதாக கூறி குறித்த வெளிநாட்டவர்கள் இலங்கை யுவதியிடம் சுமார் ஒரு லட்சம் வரை பணம் மோசடி செய்துள்ளார்.
தென்கொரியா - லெசதோ என்ற இடத்தைச் சேர்ந்த 23 வயதான நபர், தம்மை தொழிலதிபர் என கூறியுள்ளார்.
இது போன்ற போலியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என இலங்கை மக்களிடம் காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கோரிக்கை விடுத்துள்ளார்.