ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்! நீதிமன்ற விசாரணையில் முக்கிய தகவல்
ஜப்பானின் நாகோயா நகரில் உள்ள குடிவரவு தடுப்பு நிலையத்தில் 2021ஆம் ஆண்டு உயிரிழந்த இலங்கைப் பெண் விஷ்மா சந்தமாலியின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என, புதன்கிழமை நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் ஒரு மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விஷ்மாவின் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் ஜப்பான் அரசுக்கு எதிராக தொடர்ந்த இழப்பீட்டு வழக்கு நாகோயா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சாட்சி அளித்த மருத்துவர் மசாமுனே ஷிமோ, விஷ்மாவின் உயிரை காப்பாற்ற மூன்று வெவ்வேறு கட்டங்களில் வாய்ப்பு இருந்ததாக கூறியுள்ளார்.
இதய நோய்
விஷ்மா கடுமையான நீரிழப்பு மற்றும் உணவுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் ரத்த ஓட்டம் குறைந்து, வைட்டமின் B1 குறைபாடு ஏற்பட்டதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.

இதன் விளைவாக அவருக்கு “பெரிபெரி” எனப்படும் இதய நோய் ஏற்பட்டதாக கூறினார்.
பின்னர் அவர் அதிர்ச்சி நிலைக்குச் சென்று, பல உடல் உறுப்புகள் செயலிழந்ததால் உயிரிழந்ததாக விளக்கினார். உணவு மற்றும் செவிலியர் பதிவுகள், சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனை முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவுக்கு வந்ததாக ஷிமோ தெரிவித்தார்.
விஷ்மா உயிரிழப்பதற்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு செய்யப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் கடுமையான பட்டினி நிலையை காட்டும் அசாதாரண மதிப்புகள் பதிவாகியிருந்ததாகவும், அந்நிலையில் வழக்கமாக இரத்த பரிசோதனை செய்து, உடனடியாக intravenous drip (IV) வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதுவே முதல் உயிர்காக்கும் வாய்ப்பாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், விஷ்மா உயிரிழப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், உயிரிழந்த நாளிலும் அவரது இரத்த அழுத்தம் அளவிட முடியாத நிலையில் இருந்ததாகவும், அசாதாரணமான ஆழமான மூச்சுத் திணறல் காணப்பட்டதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.
இந்த சாட்சியம், விஷ்மா சந்தமாலியின் மரணத்தில் குடிவரவு மையத்தின் மருத்துவ அலட்சியம் இருந்ததா என்ற கேள்வியை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 13 மணி நேரம் முன்