துபாயில் ஈரானிய ஏவுகணை தாக்குதலை காணொளி எடுத்த இலங்கையருக்கு நேர்ந்த நிலை
Sri Lanka
Dubai
Iran
Arrest
By Jaso
துபாய் மீது ஈரான் நடத்திய தொடர் ஏவுகணைத் தாக்குதல்களால் ஏற்பட்ட சொத்து சேதங்களை படம்பிடித்து, அக்காட்சிகளைப் பிற தரப்பினருடன் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் துபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட ஒன்பது (09) இலங்கையர்கள், வரும் நாட்களில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளனர் என கட்டநாயக்க சர்வதேச விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளும் இலங்கையர்கள், வேலைக்காக துபாய் சென்ற தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது.
முன்னரும் 26 இலங்கையர் நாடுகடத்தல்
அரசின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்த காணொளிகளைப் பதிவுசெய்து வெளியிட்ட அதே குற்றத்திற்காக, நாட்டின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேலும் இருபத்தாறு (26) இலங்கையர்கள், இரண்டு முறை நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்