அதிவேக நெடுஞ்சாலை மீட்பு பணிகளில் இணைக்கப்பட்ட இலங்கை விமானப்படை
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை விமானப்படை அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி முதல் இந்த மீட்பு நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் நளின் ஹேவக்கும்புர தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்த மீட்புப் பணிகள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல்துறை விசேட அதிரடிப்படையினர்
இதற்கமைய, கட்டுநாயக்க முதல் கொட்டாவ வரை மற்றும் கொட்டாவ முதல் மத்தள வரையான அதிவேக நெடுஞ்சாலைப் பகுதிகளில் மீட்புப் பணிகளை இலங்கை விமானப்படை மேற்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் மீட்புப் பணிகளை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்தும் மேற்கொள்வர் என கூறியுள்ளார்.
இந்தநிலையில் களனிகம, சீதுவ, குருந்துகஹஹெதக்ம, பின்னதூவ மற்றும் சூரியவெவ ஆகிய இடங்களில் மீட்புப் பணிகளுக்காக விமானப்படை அதிகாரிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |