சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர விவகாரம்- வாக்கெடுப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நாளை 5ஆம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்புத் துறைமுகத்தை ஒட்டியதாக அதிகமான கடற்பகுதியை மணல்நிரப்பி தரையாக மாற்றப்பட்டுள்ள கொழும்பு போர்ட் சிட்டி திட்டம் தற்போது சர்ச்சைக்குரிய வேலைத்திட்டமாக காணப்படுகின்றது.
ஸ்ரீலங்காவிy; முதன்முறையான தீவுப்பகுதியாக உருவாக்கப்பட்டிருக்கும் கொழும்பு போர்ட் சிட்டி திட்ட முதலீட்டு வலயத்தில் முதலீடுகளையும் பிணக்குகளையும் கையாள்வதற்காக அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்ட ஆணைக்குழுவை அமைக்கும் சட்டமூலத்தை எதிர்த்து 19 மனுக்கள் உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகளும் நிறைவடைந்துள்ளன.
குறித்த மனுக்கள் தொடர்பிலான உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானம் ஸ்ரீலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இதுவரை கிடைக்காமையினால் திட்டமிடப்பட்ட நாடாளுமன்ற அமர்வினை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.