இலங்கையைப் புரட்டிப்போடும் கொரோனா! நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்றாளர்கள்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவை, பிட்டக்கோட்டை மற்றும் பொரலஸ்கமுவ உள்ளிட்ட இடங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் 529 பேர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அவர்களில், பாதிக்கப்பட்ட பிலியந்தலை சேர்ந்த 60 பேரும் மொரட்டுவவைச் சேர்ந்தவர்கள் 54 பேரும் பிட்டகோட்டையைச் சேர்ந்தவர் 35 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி இலங்கையில் நேற்று மாத்திரம் 1, 923 பேர் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, இது இலங்கையில் ஒரு நாளில் கண்டறியப்பட்ட அதிக எண்ணிக்கையாகும்.
அவர்களில் ஒன்பது இலங்கையர்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டவரவார். கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 232 பேரும், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 264
பேரும், காலி மாவட்டத்தைச் சேர்ந்த 154 பேரும், குருநாகல் மாவட்டத்தைச்சேர்ந்த 122 பேரும் நேற்று கண்டறியப்பட்டனர்.