களமிறக்கப்பட்ட முப்படையினர்! வெளியே வரவேண்டாம் - பொது மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை
நாட்டையும் ,மக்களையும் ,பொதுச் சொத்துக்களையும் பாதுகாக்கும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்குமாறு இராணுவ தளபதி சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.
அமைதியை ஏற்படுத்தும் இராணுவத்தினரின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பை வழங்குங்கள். வீடுகளில் இருங்கள். தேவையற்ற வகையில் வெளியில் வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் நிலவும் அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அமைதியை நிலைநாட்ட முப்படைகளின் படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள வன்முறையை கட்டுப்படுத்த உதவிய அனைத்து மக்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் நாடு முழுமையாக வழமைக்கு திரும்பிவிடும். நாடு முழுவதும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
எனவே யாரேனும் பொது சொத்துக்களின் மீது கை வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.