இலங்கையின் முடிவு மிகவும் அபத்தமானது - எச்சரிக்கிறது எதிர்க்கட்சி
அரசாங்கத்தின் அமைச்சர்களான விமல் வீரவன்சவின் (Wimal Weerawansa) அறிக்கைகள் வாசுதேவ நாணயக்காரவின் (Vasudeva Nanayakara) அறிக்கைகள் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 சிறிய கட்சிகளும் அரசாங்கத்தின் உள்ளக செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்துள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
குறிப்பாக நேற்றைய தினம் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியொன்றின் தலைவர், பொதுஜன பெரமுனவின் முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) அரசாங்கத்தின் மீது கடுமையான தாக்குதல்களை தொடுத்துள்ளார்.
அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவே அவர் கூறுகிறார். மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசின் தலையீடு மிகவும் பலவீனமாகிவிட்டது என்று கூறுகிறார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சரிவுகளை எதிர்கொள்ள அரசாங்கத்தின் இயலாமை பற்றிய ஒரு நேர்காணலில் இணைய தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தேர்தலுக்கு முன் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட அனைத்து கொள்கைகளும் தற்போது தலைகீழாக மாறி வருகின்றன.
அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மிகவும் தீவிரமானவை என்பதையே இது காட்டுகிறது. நாட்டில் சரிவு கண்டுவரும் ராஜபக்ஷ அரசாங்கம் மேல் எழும் சிக்கல்களை கையாள இயலாமல் போய்விட்டது என்பது மிகவும் தெளிவாக உள்ளது.
சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) சுட்டிக்காட்டிய யதார்த்தம், வாசுதேவ நாணயக்காரவின் (Vasudeva Nanayakara) கூற்று, விமல் வீரவன்ச (Wimal Weerawana) உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கூறும் அனைத்துக் கருத்துக்களும் அரசாங்கத்திற்குள் உள்ளகக் கிளர்ச்சியையே காட்டுகின்றன.
அனல்மின் நிலையத்தை விற்கும் முடிவை பாருங்கள். நாட்டின் தேசிய வளங்களை கொள்ளையடிப்பதாக, மின் உற்பத்தி நிலையத்தை விற்பனை செய்வதன் மூலம் எரிவாயு விநியோகத்தின் ஏகபோக உரிமை ஒப்பந்தங்கள் என்னவென்று தெரியாது என்று அமைச்சரவை அமைச்சர்களும் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்கள்.
நாடும், அமைச்சரவையும் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். எந்த மதிப்பீட்டாளர் அதன் மதிப்பை தீர்மானித்தார் என்பது இங்குள்ள பிரச்சினையாகும்.
அதை விற்கும் முடிவில், அதை வாங்கிய அமெரிக்க நிறுவனத்தின் மதிப்பீடு, என்பன தொடர்பாக இலங்கையின் முடிவு மிகவும் அபத்தமான முடிவாகும்.
அது மட்டுமல்ல, எரிவாயு விநியோக ஏகபோகத்தின் மூலம் ஒரு பெரிய தொகையை மோசடியாக கொள்ளையடிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹெஜ்ஜிங் ஒப்பந்தத்தை விட அதிக நஷ்டத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தத்திற்கு இலங்கை அரசாங்கம் செல்கிறது.எனவே இந்த கொடுக்கல் வாங்கல் மோசடி என்பது நாட்டின் முன் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.