இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை - மற்றுமொரு பொருளின் விலை உயரும் ஆபத்து
இலங்கையில் பருப்பின் விலை மேலும் அதிக்க கூடும் என அத்தியாவசிய உணவுகளின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் சந்தையில் ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 250 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதென அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கைக்கான பருப்பு அவுஸ்திரேலியா மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.
எப்படியிருப்பினும் கனடாவில் பருப்பு பயிர் செய்கை பாரிய அளவு குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பருப்பின் விலை இவ்வாறு உயர்வடைய காரணமாகியுள்ளதென அத்தியாவசிய உணவுகளின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இதே நிலைமை தொடர்ந்தால் பருப்பின் விலை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,