கோட்டாபயவின் மூத்த சகோதரர் அரச தலைவராகியிருந்தால்... இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது! சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தகவல்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு மூத்த சகோதரரான சமல் ராஜபக்ச கூறிய அறிவுரைக்கு பின்னரே பசளை பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்க்கட்சி கருதுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கடந்த அரச தலைவர் தேர்தலில் எந்தவொரு ராஜபக்சக்கள் போட்டியிட்டிருந்தாலும் வெற்றி பெற்றிருப்பார்கள் என்ற அடிப்படையில் சமல் ராஜபக்ச போட்டியிட்டிருந்தால் அவரே அவரே அரச தலைவராகியிருப்பார். அன்று அப்படி நிகழ்ந்திருந்தால் பசளைப் பிரச்சினை இன்று ஏற்பட்டிருக்காது என்றும் நளின் பண்டாரமேலும் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் சபையில் உரையாற்றிய அவர், புத்தளத்தில் குளங்களை அமைக்க அரசாங்கம் 15லட்சம் வழங்கவேண்டும் என்று ராஜாங்க அமைச்சர்கள் கூறியுள்ளதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்துமாறு நளின் பண்டார, சமல் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ, இவ்வாறான கருத்துக்களை தாம் கூறவில்லை என்று குறிப்பிட்டார். அத்துடன் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜெயரத்னவிடம் கேள்வி எழுப்புமாறும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், அமைச்சர் சமல் ராஜபக்ச இந்த சம்பவம் தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் அதனடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் குறிப்பிட்டார்.